ETV Bharat / state

மழைநீரால் சூழ்ந்த சார்ந்தநாதர் கோயில்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

author img

By

Published : Oct 31, 2019, 11:40 AM IST

ஆறுபோல் காட்சியளிக்கும் சார்ந்தநாதர் கோயில்

புதுக்கோட்டை: கனமழையால் சார்ந்தநாதர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சார்ந்தநாதர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோயில் பூட்டப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்லாங்குளம் நிரம்பி, சாந்தநாதர் கோயில் வளாகத்துக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

ஆறுபோல் காட்சியளிக்கும் சார்ந்தநாதர் கோயில்

இதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வீடு திரும்புகின்றனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோல் கனமழை பெய்தபோது, இந்த கோயில் உள்ளே மழைநீர் புகுந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

அதேபோல், தற்போது பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் கோயிலுக்குள் புகுந்துள்ளதால் வெளியே செல்ல வழியில்லாமல் ஆறுபோல் ஓடுகின்றது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க : லேசான மழைக்கே ஒழுகும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடம்!

Intro:Body:புதுக்கோட்டை மாவட்ட மையப்பகுதியில் உள்ள சார்ந்தநாதர் கோவில் உள்ளே மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை கோயில் பூட்டப்பட்டது.

தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் சாந்தநாதர் கோயில் அருகேயுள்ள உள்ள பல்லாங்குளம் நிரம்பி அருகே உள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மழை நீர் புகுந்ததால் கோவில் நிர்வாகிகள் கோவிலுக்கு பக்தர்கள் உள்ள அனுமதிக்கப்படாமல் பூட்டினர்


இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் மீண்டும் வீடு திரும்பி சென்றனர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இதே போல் கன மழை பெய்த போது இந்த கோவில் உள்ளே மழைநீர் புகுந்தது ஆனால் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தனர் தற்போது கனமழை காரணமாக மழை நீர் வெளியில் செல்ல வழியில்லாமல் மழை நீர் வரத்து வாதிகள் தூர்வாரப்படாததால் கோவிலுக்குள் தண்ணீர் உள்ளே புகுந்து உள்ளது கோவில் அருகே உள்ள மார்க்கெட் பகுதிகளிலும் பூ மார்க்கெட் பகுதியிலும் ஆறுபோல் ஓடுகிறது பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்
மார்கெட்டில் பாம்பு புகுந்ததால் வியபாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.