கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தே. இடையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்றுவருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளி தொடங்கியது. நேற்று முதல் இன்றுவரை பருவமழை லேசாக பெய்துவரும் நிலையில், ஆங்காங்கே கட்டடத்திலிருந்து மழைநீர் ஒழுகும் காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டாக சேதமடைந்த இந்தக் கட்டடம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இன்றுவரை அந்தக் கட்டடத்தின் மீது எந்த நடவடிக்கையும் நிர்வாகம் சார்பாக எடுக்கப்படவில்லை.
லேசான மழை திடீரென்று பலமாக பெய்தால் பள்ளியின் கூரைகள் இடிந்து விழும்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!