ETV Bharat / state

"சீறிப்பாயும் காளைகள்"... புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டி!

author img

By

Published : Apr 5, 2023, 3:14 PM IST

jallikattu
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி...

பங்குனி திருவிழாவை முன்னிட்டு இருந்திராபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகளும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி...

புதுக்கோட்டை இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராபட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப்போட்டி இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 700 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, காளைகளை அடக்கி வருகின்றனர். இதுவரை 290 மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ள இப்போட்டியில் 11 வீரர்கள் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மேல் சிகிச்சைக்காக இருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டியை மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் சின்னத்தம்பி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள், கால்நடைத் துறையின் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது.

மேலும் போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, பீரோ, பிரிட்ஜ், டிரஸ்சிங் டேபிள், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இப்போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்காண மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளித்து வருகின்றனர். போட்டி நடைபெறும் இடத்தில் மாவட்ட மருத்துவத் துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காயமடைபவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேல் சிகிச்சை தேவைப்படுவோர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புப் பணியில் 2 டிஎஸ்பி தலைமையில் 128-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளைக்கொம்பன் மற்றும் கருப்புகொம்பன் ஆகிய மூன்று காளைகளும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திராவிட மாடல் பயிற்சி பட்டறை; புதிய அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.