ETV Bharat / state

சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி உயிரிழப்பு

author img

By

Published : Jun 30, 2020, 7:42 PM IST

death
death

பெரம்பலூர்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. அப்போது சாலையை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் மீது லாரி மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிரிழந்த நபர் யார், அவர் எந்த ஊர் என்பது குறித்த விவரங்களை பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மேற்கு வங்க பள்ளிகளில் கரோனா குறித்த பாடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.