ETV Bharat / bharat

மேற்கு வங்க பள்ளிகளில் கரோனா குறித்த பாடம்

author img

By

Published : Jun 30, 2020, 6:56 PM IST

கொல்கத்தா: கரோனா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி
பள்ளி

கரோனா வைரஸ் பரவும் விதம், அதன் அறிகுறிகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றை, வரும் கல்வியாண்டில் (2021) மேற்கு வங்க பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்மாநில பாடத்திட்டக் குழு தலைவர் அவீக் மஜும்தீர், “பாடத்திட்டத்தில் கரோனா குறித்த தரவுகளை இணைப்பதற்காக பாடத்திட்டக் குழு உறுப்பினர்களிடமும், கல்வி ஆலோசகர்களிடமும் கலந்துரையாடி வருகிறோம். நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் கரோனா குறித்த பாடங்களை அறிமுகப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதில், கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் அடிப்படை சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த அத்தியாத்தின் உள்ளடக்கத்தை வழக்கம்போல் கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள் முடிவுசெய்ய மாட்டார்கள். பிரத்யேகமாக மருத்துவர்கள், வைராலஜிஸ்டுகள், தொற்று நோயியல் நிபுணர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும்” என்றார்.

இதையும் படிங்க: காவலருக்கு கரோனா தொற்று உறுதி: வேறு இடத்துக்கு காவல் நிலையம் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.