பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இக்பால். இவர் திருமாந்துரை பகுதியில் கழிவுநீர் தொட்டியை சீர்செய்யக் கோரியும் சில அடிப்படை பிரச்னைகளுக்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்திருந்தார்.
ஆனால், இந்த மனு தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களை மாற்றக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
மனு வாங்க மறுக்கப்பட்டதால், குறைதீர் கூட்டம் நடைபெறும் இடத்திலேயே இக்பால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது