ETV Bharat / state

'தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதில் அளிக்க வேண்டும்'- மாநில தகவல் ஆணையர்!

author img

By

Published : Oct 4, 2019, 5:05 PM IST

மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் மனுதாரர்களை விசாரித்தார்

நாமக்கல் : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோரப்படும் தகவல்களை உடனடியாக மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் என மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகள் குறித்து மாநிலத் தகவல் ஆணையத்திற்கு 2ஆவது மேல்முறையீட்டுக்காக 60 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்களின் மீது விசாரணை செய்வதற்கு, தகவல் ஆணையர்கள் முத்துராஜ், தமிழ்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து இரண்டாவது மேல்முறையீடு செய்திருந்த மனுதாரர்களிடமும், அதற்கு உரிய அலுவலர்களிடமும் நேரில் விசாரணை நடத்திய பின்னர் தீர்வுகள் வழங்கினர்.

மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் மனுதாரர்களை விசாரித்தார்

அப்போது பேசிய ஆணையர் முத்துராஜ், பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களுக்கு உரிய காலத்தில் தக்க பதில் அளிக்க வேண்டும் எனவும், வேண்டுமென்றே காலம் தாழ்த்தக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : 'பொது பிரச்னைகளுக்கு மக்கள் எந்த நேரமும் அணுகலாம்' - புதிய மாவட்ட ஆட்சியர் தகவல்!

Intro:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை உடனடியாக மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.



Body:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை உடனடியாக மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


நாமக்கல் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உயர் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகள் குறித்து மாநில தகவல் ஆணையத்திற்கு 60 மனுக்கள் 2-வது மேல்முறையீட்டு மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களின் மீது விசாரணை செய்ய தகவல் ஆணையர்கள் முத்துராஜ் அவர்கள் மற்றும் தமிழ்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து இரண்டாவது மேல்முறையீடு செய்திருந்த மனுதாரர்களையும்,  அதற்கு உரிய அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் தீர்வுகள் வழங்கினர். அப்போது பேசிய ஆணையர் முத்துராஜ் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களுக்கு உரிய காலத்தில் தக்க பதில் அளிக்க வேண்டும் எனவும், வேண்டுமென்றே காலம் தாழ்த்த கூடாது எனவும் தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.