ETV Bharat / state

ராசிபுரம் கருப்பணார் கோயில் - 1200 கிலோ பன்றிக்கறி, 1000 கிலோ ஆட்டுக்கறியுடன் அன்னதானம்

author img

By

Published : Feb 6, 2023, 9:55 PM IST

Etv Bharat
Etv Bharat

ராசிபுரம் அடுத்த போதமலை கள்ளவழி கருப்பணார் கோயிலில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

ராசிபுரம் கருப்பணார் கோயில் - 1200 கிலோ பன்றிக்கறி, 1000 கிலோ ஆட்டுக்கறியுடன் அன்னதானம்

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்திபெற்ற கள்ளவழி கருப்பணார் கோயில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த கோயிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர்.

இங்கு வருடம்தோறும் தை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி விருந்து வைக்கப்படும். இதையொட்டி நேற்று (பிப்.05) மாலை 4 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில், ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சி, ஆயிரத்து 200 கிலோ பன்றி இறைச்சி, 120 கிலோ கோழி இறைச்சி வைத்து முப்பூஜை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். தொடர்ந்து பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையலை 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே செய்தனர். இதில் சுமார், 2ஆயிரத்து 320 கிலோ இறைச்சி சமைக்கப்பட்டது. இதில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.