ETV Bharat / state

"வேளாண் மண்டலம் தனிச் சட்டமாக வேண்டும்" - ஜெயராமன்

author img

By

Published : Feb 10, 2020, 9:49 AM IST

methane-jayaraman
methane-jayaraman

நாகப்பட்டினம்: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை தனிச் சட்டமாக இயற்ற வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரிப்படுகை பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், அங்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது.

மீத்தேன் ஜெயராமன்

இருப்பினும், அறிவிப்புடன் மட்டுமல்லாமல், அதனைத் தனிச் சட்டமாக இயற்ற வேண்டும். ஏற்கனவே அனுமதியின்றி செயல்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறுத்த வேண்டும். மேலும் இத்திட்டங்களை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Intro:ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புடன் இல்லாமல், காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக தனி சட்டம் இயற்ற வேண்டும், பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் பேட்டி:-Body:ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புடன் இல்லாமல், காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக தனி சட்டம் இயற்ற வேண்டும், பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் பேட்டி:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. இருப்பினும், அறிவிப்புடன் இல்லாமல், காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்து தனி சட்டம் இயற்றி அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அனுமதி இன்றி செயல்படும் திட்டங்களை நிறுத்த வேண்டும். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பைட்:-
பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.