முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரிப்படுகை பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், அங்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது.
இருப்பினும், அறிவிப்புடன் மட்டுமல்லாமல், அதனைத் தனிச் சட்டமாக இயற்ற வேண்டும். ஏற்கனவே அனுமதியின்றி செயல்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறுத்த வேண்டும். மேலும் இத்திட்டங்களை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!