மதுரை: காளவாசலில் பிரபல தனியார் நிறுவனத்தின் பலசரக்கு மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இக்கடையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தக் கடையில் தூத்துக்குடியைச் சேர்ந்த அருண், உஸ்மான் ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்துள்ளனர். வெளியூர்களில் இருந்து லாரிகள் மூலம் கடைக்கு வரும் காய்கறிகளை இறக்கி வைப்பதை இருவரும் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகள் அளவு குறைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அப்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட காய்கறிகளை அருண், உஸ்மான் ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து காய்கறி திருட்டு குறித்து மேலாளர் பாஸ்கரன் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாடு தப்பிக்க முயன்ற தலைமறைவு குற்றவாளி விமான நிலையத்தில் சிக்கினார்!