ETV Bharat / state

போலீஸ் வழிப்பறி.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. சென்னையில் அடுத்தடுத்து ஷாக்! - chennai police robbery

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:24 PM IST

chennai police arrested: சென்னை கீழ்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவியாளர் ராமமூர்த்தி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காவலர் மற்றும் பணம் கோப்புப்படம்
காவலர் மற்றும் பணம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை புதுப்பேட்டை சியாளி தெருவச் சேர்ந்தவர் சித்திக் (50). இவர் கடந்த ஏழு வருடமாக தயிர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 9ஆம் தேதி இரவு 8.45 மணியளவில், கீழ்பாக்கம் ஈவிஆர் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் செலுத்துவதற்கு சித்திக் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு தலையில் ஹெல்மெட்டுடன், வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்தபடி, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், ஏடிஎம் அறையில் இருந்த சித்திக்கை வெளியே வரும்படி கூறியுள்ளார். இதனால் சித்திக், தான் கொண்டு வந்த பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்யாமல் வெளியே வந்து என்னவென்று கேட்டுள்ளார்.

ஏடிஎம் முன்பே துணிகரம்: அதற்கு அந்த நபர், ''நான் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ். நீங்கள் ஏடிஎம்மில் வெகுநேரமாக என்ன செய்கிறீர்கள்? உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது. கையில் என்ன இவ்வளவு பணம்? அதை கொடு'' எனக் கூறி சித்திக்கிடம் இருந்த பணத்தை பிடுங்கியுள்ளார்.

பின்னர் ''வண்டியில் ஏறு, உன் மீது நிறைய வழக்கினைச் சேர்த்து விடுவேன்'' என மிரட்டி, இங்கிருந்து ஓடிவிடு எனக் கூறிவிட்டு சித்திக்கிடம் பிடுங்கிய 34 ஆயிரத்து 500 ரூபாயைக் கொண்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திக், இது குறித்து கீழ்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

எஸ்எஸ்ஐ வழிப்பறி: அதில், பணத்தை பறித்துக் கொண்டு சென்ற நபர் கீழ்பாக்கம் லூட்டர்ஸ் கார்டன் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ராமமூர்த்தி (55) என்பதும், இவர் ஐசிஎப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) காவலராகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்த கீழ்பாக்கம் போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சஸ்பெண்ட்: அதனைத் தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற எஸ்எஸ்ஐ ராமமூர்த்தியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தி.நகர் பகுதியில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த அர்ஷத் என்பவரிடமிருந்து காவலர் ராகுல் என்பவர் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாக கூறப்பட நிலையில், அவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: "அது என்னோட வாய்ஸ் இல்லை" - நடிகர் கார்த்திக்குமார் போலீஸ் துணை ஆணையரிடம் புகார்! - Actor Karthik Kumar Complained

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.