ETV Bharat / state

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி எருதுவிடும் விழா தொடக்கம்!

author img

By

Published : Feb 24, 2021, 6:18 AM IST

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி எருதுவிடும் விழா தொடக்கம்
ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி எருதுவிடும் விழா தொடக்கம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பாரம்பரியமான எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சீபம் கிராமத்தில் பாரம்பரியமான எருதுவிடும் விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் மீது ரோஜா மலர்களை தூவி எருதுவிடும் விழா தொடங்கியது.

ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் காளைகள் கலந்துகொண்டன. சீறி வந்த காளைகளை காளையர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.

மலர் தூவி தொடங்கப்பட்ட விழா

இந்த பாரம்பரியமான எருதுவிடும் விழாவினை காண சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

இதையும் படிங்க: எருதுவிடும் விழாவில் இளைஞரைத் தூக்கி வீசிய காளை: காயமடைந்தவர் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.