ETV Bharat / state

கடன் தொல்லை - குடும்பத்துடன் கூலித் தொழிலாளி தற்கொலை

author img

By

Published : Sep 11, 2022, 10:46 PM IST

laborer
laborer

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கடன் தொல்லை காரணமாகக் கூலி தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி: அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கிருஷ்ணன்குட்டி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது மகள் நித்யாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நித்யா விவாகரத்து பெற்றுக் கொண்டு, தாய் வீட்டுக்கே வந்துவிட்டார்.

இந்த நிலையில், கிருஷ்ணன்குட்டி, அவரது மகள் நித்யா, மனைவி ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், அவர்களது உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், மகள் திருமணத்திற்காக கிருஷ்ணன்குட்டி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அந்த கடன் தொல்லை காரணமாகவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பென்னாகரம் அருகே பெட்ரோல் ஊற்றி இளைஞர் கொலை;எஸ்.பி. நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.