ETV Bharat / state

திண்டுக்கல்லில் கைவரிசை: தூத்துக்குடியினர் மூவர் குண்டாஸில் கைது!

author img

By

Published : Nov 11, 2019, 7:35 PM IST

three thoothukudi accused arrested under goondas act

திண்டுக்கல்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சேதுகுவாய்த்தான் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சத்திய முகேஷ் (21). இதே மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கபழங்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் மாரித்துரை(20), முத்து தினேஷ் (20). இவர்கள் மூவர் மீது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தூத்துக்குடியினர் மூவர் குண்டாஸில் கைது
இவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் கைதிகளாக உள்ள மூன்று பேரும், தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர் கைது; போலீஸ் அதிரடி

Intro:திண்டுக்கல் 11.11.19

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

Body:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, சேதுகுவாய்த்தான் கிழக்கு தெருவைச் சேர்ந்த சத்திய முகேஷ்-21. இதே மாவட்டம் சொக்கபழங்கரை, கிழக்கு தெருவைச் சேர்ந்த மாரித்துரை-20 மற்றும் முத்து தினேஷ்-20 ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து
மதுரை மத்திய சிறையில் கைதிகளாக உள்ள 3 பேரும் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.