ETV Bharat / state

2வது நாளாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:38 PM IST

ed raid
2வது நாளாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ED Raid: மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

2வது நாளாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று (செப்.12) காலை 9 மணி முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 11மணியளவில் கோவிந்தன் வசிக்கும் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்தனர். திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து 2ஆவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ரத்தினம் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின்போது மனைவி, இரு மகன்கள், தாயார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனிடையே, காலையில் வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் நகை எடை இயந்திரத்துடன் வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்த நகைகளை எடை போட்டு மதிப்பீடு செய்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை இன்று மாலை 4 மணி அளவில் நிறைவடைந்தது. ரத்தினம் வீட்டில் தொடர்ந்து 31 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அமலாக்கத் துறையினர் முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். சோதனையின்போது ரத்தினம் மற்றும் மாமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.