ETV Bharat / state

கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

author img

By

Published : Oct 31, 2021, 7:54 PM IST

கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக கனமழை பெய்து வருவதால் கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்: அரசு உத்தரவின்படி நாளை (நவ.1) முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனையடுத்து பள்ளிகளை தயார்படுத்தும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதே சமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடலூரில் பெய்யும் கனமழையின் காரணமாக நாளை (நவ.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு செல்ல ஆசையுடன் காத்திருந்த மாணவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: “நமக்கு நாமே” திட்டம்: அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் - மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.