ETV Bharat / state

என்.எல்.சி தீ விபத்து: உயிரிழப்பு  மூன்றாக உயர்வு

author img

By

Published : May 13, 2020, 2:17 PM IST

என்எல்சி தீ விபத்து உயிரிழப்பு மூன்றாக உயர்வு
என்எல்சி தீ விபத்து உயிரிழப்பு மூன்றாக உயர்வு

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கடந்த மே 7ஆம் தேதி, பாய்லர் வெடித்து எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த எட்டு பேரை திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சர்புதீன், சண்முகம் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அந்த நிறுவன நிரந்தரத் தொழிலாளி பாவாடை(45) என்பவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.

தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும் மூன்று பேர் தொடர்ந்து, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: 10 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் - டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.