ETV Bharat / state

மணல்குவாரி அமைத்துதரக் கோரி ஆர்ப்பாட்டம்: மாட்டுவண்டி தொழிலாளர்கள் கைது!

author img

By

Published : Dec 23, 2020, 5:47 PM IST

மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆற்றிலிருந்து நேரடியாக மணல் அள்ளும் வகையில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து தரவேண்டும் என்று கடலூரில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்: கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே, மாட்டுவண்டியில் மணல் அள்ளுபவர்களுக்கு மணல்குவாரி அமைத்து தரக்கோரி, ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ள மணல்கு வாரிகளில், அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களும் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், மணல் அள்ளிய போது, காவல்துறையால் பிடிக்கப்பட்ட மாட்டுவண்டிகளை உடனடியாக வண்டி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அரசு, தனியார் நிலங்களில் மணல்குவாரி அமைத்து லாரிகளுக்கு மணல் கொடுப்பதை தவிர்த்து, ஆற்றிலிருந்து நேரடியாக மணல் அள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாட்டுவண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க : அரசு அலுவலர்கள் அலட்சியம் - பராமரிப்பின்றி 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.