ETV Bharat / state

பிணைக் கைதியாக வெளிவந்த குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!

author img

By

Published : Feb 13, 2023, 3:38 PM IST

பிணைக் கைதியாக வெளிவந்த குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை
பிணைக் கைதியாக வெளிவந்த குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

கோவையில் கொலை வழக்கில் பிணைக் கைதியாக வெளிவந்த குற்றவாளியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்

கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரில் வசித்து வந்தவர், பிஜு(40 ). இந்து அமைப்பைச் சேர்ந்த இவர் ராம் நகரில் சோடா கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நிதீஷ் குமாரை, ராம் நகரைச் சேர்ந்த சிலர் கத்தியால் குத்தினர்.

இதையடுத்து நிதீஷ்குமார் மீதான தாக்குதலுக்கு பிஜு தான் காரணம் என நினைத்த அவரது ஆதரவாளர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு காந்திபுரம் பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அருண் பிரசாத், விவேக் பிரபு, இளையராஜா, அரவிந்த், உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிஜு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சக்தி பாண்டி என்பவர் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள இளநீர் கடை முன்பாக நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், சக்தி பாண்டியை அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிர் தப்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்தி கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் துப்பாக்கி, கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மர்ம கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் நபர் யார்? - கோவையில் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.