ETV Bharat / state

கோவையில் விடிய விடிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

author img

By

Published : Jan 7, 2021, 2:16 PM IST

Heavy rains in Coimbatore affect normal life  Heavy rains in Coimbatore  கோவையில் விடிய விடிய கனமழை  கோவையில் கனமழை  கோவை வானிலை செய்திகள்  Coimbatore Weather News  Coimbatore Rain News  Tamilnadu Rain News
Heavy rains in Coimbatore

கோவை: விடிய விடிய பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியம், இரவு வேளைகளில் மழை பெய்வதால், கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று (ஜன. 06) கருமேகங்கள் சூழ்ந்து விடிய விடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நகரின் முக்கிய பகுதிகளான, காந்திபுரம், ரயில் நிலையம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி போன்ற பகுதிகளிலும், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி போன்ற பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது.

மழைநீர் அப்புறப்படுத்தல்

இதனால், அவினாசி சாலை மேம்பாலம், கிக்கானி பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள பாலங்களின் அடியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதில், குறிப்பாக கோவை புரூக்பாண்ட் சாலை அருகேயுள்ள மேம்பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மழை நீரில் சிக்கியுள்ளது. தகவலறிந்து, போர்க்கால அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை முதலே ராட்சத குழாய்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தி சாலைகளை ஒழுங்குப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Heavy rains in Coimbatore affect normal life  Heavy rains in Coimbatore  கோவையில் விடிய விடிய கனமழை  கோவையில் கனமழை  கோவை வானிலை செய்திகள்  Coimbatore Weather News  Coimbatore Rain News  Tamilnadu Rain News
மழை நீரை அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், ஆகியோர் மாநகரப் பகுதியில் நீர் சூழ்ந்த இடங்களை ஆய்வு செய்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் புகுந்த சாக்கடை நீரை விரைவில் அகற்றி கிருமி நாசினி தெளிக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த மழை காரணமாக மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழி பெரும் பள்ளமாக மாறி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், தொடர் மழையால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டபோதும், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: தொடர் கனமழை: பூண்டி ஏரியிலிருந்து 3,000 கனஅடி நீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.