ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 5 PM

author img

By

Published : Sep 25, 2021, 5:04 PM IST

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம்

ஆட்டத்தை தொடங்கிய தாலிபன் - ஆப்கனில் மீண்டும் கடுமையாகும் கொடூரச் சட்டங்கள்

கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள் என்றும் திருடர்களின் கைகளை வெட்டுதல் உள்பட பல்வேறு தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் பிணையில் வெளியில் வந்த நடிகை மீரா மிதுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

IPL 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு

டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை - களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

டிஎன்பிஎஸ்சி: இவ்வளவு மதிப்பெண் பெற்றால் மட்டுமே வேலை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காதல் அகத்தினுள் உறையும் அனுபமா..!

காதல் அகத்தினுள் உறையும் அனுபமா..!

தடுப்பூசி சிறப்பு முகாம் - 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.25) நடைபெறும் 20 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

மனமிருந்தால் போதும் எதையும் வெல்லலாம் என குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாற்றுத் திறனாளி ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதி தீவிர புயலாக மாறும் குலாப்

குலாப் புயல் தமிழ்நாட்டில் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Operation Disarm: 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் 2ஆயிரத்து 512 ரவுடிகளை கைது செய்யப்பட்டு அதில் 733 ரவுடிகளை சிறையில் அடைத்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.