ETV Bharat / state

நாளை முதல் சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை:அமைச்சர் பெரியகருப்பன்

author img

By

Published : Jul 3, 2023, 2:53 PM IST

நாளை முதல் சென்னையில் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

பெரிய கருப்பன்
periya karuppan

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாளை முதல் நியாய விலை கடைகள் மற்றும் பண்ணை பசுமை மையங்களில் உள்ளிட்ட 111 மையங்களில் தக்காளி 60 ரூபாய் விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . தக்காளியின் விலை உயர்வாக இருப்பதின் அடிப்படையில் மேலும் விலை அதிகரிக்காமல் இருக்க ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பண்ணை பசுமை கடைகளில் கூடுதலாக அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இந்த விலையேற்றம் அல்ல அனைத்து மாநிலங்களும் இந்த விலையேற்றம் உள்ளது என தெரிவித்தார்.

இதைக் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சரியான பருவமழை இல்லாததால் தான் விளைச்சல் மிக குறைவாக உள்ளது எனக் கூறினார், என தெரிவித்த அமைச்சர் இதைத்தான் நாங்களும் நினைவூட்டி இருக்கிறோம், தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் அகில இந்தியாவிலும் இந்த பிரச்சனை உள்ளது எனக் கூறினார்.

இதையும் படிங்க: மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக 'டிமிக்கி' தந்த நபர் - சென்னை விமான நிலையத்தில் கைது!

இதுகுறித்து தோட்டக்கலை சார்ந்த அனைவர்களும் ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் முதல் கட்டமாக வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று பகுதிகளாக பிரித்து மத்திய சென்னையில் 32 கடைகளில் வடசென்னையில் 25 கடைகள் தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 கடைகளில் கிடைக்க வழி வகை செய்யப்படும் எனவும் நாளை முதல் 111 கடைகள் மற்றும் பண்ணை பசுமை மையங்களில் தக்காளி 60 ரூபாய் விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், வரும் நாட்களில் இது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் வேளாண் உற்பத்தி மையத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் அதிக உற்பத்தி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 75 விழுக்காடு தக்காளி, தமிழகத்திலேயே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு பெறப்படுகிறது மீதி உள்ள 25 விழுக்காடு மட்டுமே வெளியிலிருந்து வர வைக்கப்படுகிறது எனவும் விவசாயிகளுக்கு ஆதார விலையை கொடுத்து அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள உறுதியளித்திருக்கிறோம் என தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், ஆண்டுதோறும் இந்த மாதங்களில் தக்காளியின் விலை கூடுதலாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது… சசிகலா சகோதரர் திவாகரன் அதிரடி பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.