ETV Bharat / state

வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் கைவரிசை - காவல் துறையினர் வலைவீச்சு

author img

By

Published : Feb 13, 2020, 11:34 AM IST

robbers-break-into-the-door-of-the-hous
robbers-break-into-the-door-of-the-hous

சென்னை: செங்குன்றம் அருகே வீட்டின் கதவை உடைத்து பத்து சவரன் நகை, மூன்று கிலோ வெள்ளிபொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ரங்கா கார்டனை சேர்ந்தவர் மனீஷ் (42). இவர் புளியந்தோப்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த எட்டாம் தேதி தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில், இன்று காலை அவரது வீட்டில் விளக்குகள் எரிவதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து மனிஷிக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது வீட்டிலிருந்த பத்து சவரன் நகை, மூன்று கிலோ வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்திற்குத் தகவலளித்தார்.

வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் கைவரிசை

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களைக் கொண்டு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி கேமிராக்களை கொண்டு திருடர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கொக்கரக்கோ பிரியாணி கடையில் வாங்கிய சிக்கனில் புழு - பாஜக பிரமுகர் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.