ETV Bharat / state

குன்னூர் விபத்து; குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 3:29 PM IST

குன்னூர் விபத்து: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரங்கல்!
குன்னூர் விபத்து: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரங்கல்!

Coonoor Tourist bus accident: குன்னூரில் 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சென்னை: தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்தபோது நேற்று (செப் 30) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

  • The loss of lives in a tragic bus accident in Nilgiris district of Tamil Nadu is deeply distressing. I extend my deepest condolences to the bereaved families and pray for the speedy recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த கோர விபத்தில் இதுவரை 9 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குன்னூர் விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக “தமிழகத்தில் நடந்த இந்த பேருந்து விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என குடியரசுத் தலைவர் அலுவலகம் தனது X தளத்தில் தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு ஏற்பட்டதைக் கேட்டு வேதனையடைகிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரணத்…

    — PMO India (@PMOIndia) October 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, குன்னூர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நிவராண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

  • நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/g0pIxhZtb9

    — CMOTamilNadu (@CMOTamilnadu) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் நேர்ந்த சோகம்.. வேன் கவிழ்ந்து விபத்து - பெண் ஒருவர் உயிரிழப்பு!

மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சம், காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , “ தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் (தற்போது 9 பேர் உயிரிழப்பு) என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தனது X தளத்தில் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: குன்னூர் பேருந்து விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.