ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்புத்தந்தை: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!

author img

By

Published : Jun 23, 2022, 7:32 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்புத்தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மாநகரில் வந்த இளைஞர், கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வரும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இரண்டாவது மனைவியின் மகளை, அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வளர்ப்புத்தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பில்,வளர்ப்புத்தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மனைவியைக் கொலை செய்த கணவர், சடலத்தின் அருகிலேயே படுத்து உறங்கிய அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.