ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 15வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 3:26 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Senthil Balaji Case update: சட்டவிரோத பணப்பரிமாற்ற செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜன.11) நிறைவு பெற்ற நிலையில், இம்மாதம் 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜன.11) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 15வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரி மனு நாளை (ஜன.12) முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை; ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.