ETV Bharat / state

பிப்.27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணிநாள் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

author img

By

Published : Feb 24, 2021, 8:40 AM IST

Tamil Nadu government
தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பிப்ரவரி 27ஆம் தேதியன்று பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2021 - 2022ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம், சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்தல் போன்றவைகள் பிப்ரவரி 27ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அன்று பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு உத்தரவு

இதையும் படிங்க: 'கை தட்டுங்கண்ணே' - சட்டப்பேரவையில் பாராட்டை கேட்டு வாங்கிய துணை முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.