ETV Bharat / state

IIT Madras:இந்தியாவிலேயே முதல்முறையாக கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளை அமைக்கும் மெட்ராஸ் ஐஐடி..!

author img

By

Published : Jun 6, 2023, 6:12 PM IST

Updated : Jun 6, 2023, 7:50 PM IST

Etv Bharat
Etv Bharat

தேசிய சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் 5வது ஆண்டாக சென்னை முதலிடத்திலும், 8வது ஆண்டாக ஒட்டுமொத்த புள்ளிகள் அளவிலும் முதலிடத்திலும் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றியதே காரணம் என்றும் மெட்ராஸ் ஐஐடியின் இயக்குனர் காமகோடி விவரித்துள்ளார். மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் மெட்ராஸ் ஐஐடியின் புதிய வளாகம் ஆரம்பிக்க உள்ளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளை அமைக்கும் மெட்ராஸ் ஐஐடி..!

சென்னை: கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் மெட்ராஸ் ஐஐடியின் புதிய வளாகம் துவக்கப்பட உள்ளளதாகவும் (First international campus of IIT Madras in Tanzania), நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் விகிதத்தை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்த வேண்டும் என்பதுதான் மெட்ராஸ் ஐஐடியின் நோக்கம் என அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

மேலும் தேசியக் கல்விக்கொள்கையில் (National Policy on Education - NEP) கூறப்பட்டுள்ளது போல், உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் குறைவாக இருக்கும்போது, அவற்றில் சேர்ப்பதற்கு நுழைவுத்தேர்வு அவசியம். மெட்ராஸ் ஐஐடியில் சாதிய பாகுப்பாடு கடைபிடிக்கப்படவில்லை. ஐஐடியில் காலியாக இருந்த பின்னடைவு பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். தேசிய கல்வியியல் தரவரிசை பட்டியலை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் (NIRF Rankings 2023) நேற்று வெளியிட்டது. அதில், மெட்ராஸ் ஐஐடி ஐந்தாவது ஆண்டாக ஒட்டுமாெத்தமாக முதலிடத்திலும், பொறியியல் பிரிவில் எட்டாவது ஆண்டாக முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐஐடி; 8வது ஆண்டாக முதலிடம்: இதுகுறித்து இன்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசிய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி, 'தேசிய கல்வியியல் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 25 சதவீதம் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன. அது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒட்டுமாெத்தமாக முதலிடத்திலும், பொறியியல் கல்வி நிறுவனங்களின் வரிசையில் 8 வது ஆண்டாக முதலிடமும் பெற்றுள்ளது. இதற்கு மெட்ராஸ் ஐஐடியில் அனைவரும் இணைந்து பணியாற்றியதால் முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

5வது ஆண்டாக ஒட்டுமொத்த புள்ளியிலும் முதலிடம்: இந்த தரவரிசையை தேசிய கல்வியியல் தரவரிசை பட்டியலில் மற்ற மாநிலங்களில் இருந்து படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் பாலின விகிதம் உள்ளிட்ட 5 தரவுகள் திரட்டி தேசிய கல்வியில் தரவரிசை அமைப்பு இந்த தரவரிசை பட்டியலை வழங்கி வருகிறது என்றார். அதன் அடிப்படையில், ஐந்தாவது ஆண்டாக ஒட்டுமொத்த குறியீடுகளில் முதலிடத்தையும், பொறியியல் பிரிவில் எட்டாவது ஆண்டாக முதலிடத்தையும் பிடித்துள்ளதாக வியப்புடன் கூறினார். இது மிகவும் பெருமையான தருணம் எனக் கூறிய அவர், இத்தனை ஆண்டுகளாக முதலிடம் பிடித்ததுள்ளது எங்களுக்கு ஊக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொடர்ந்து 5 வது ஆண்டாக முதலிடம் : சென்னை ஐஐடி சாதனை

மெட்ராஸ் ஐஐடியில் படிக்க ஒரு மகத்தான வாய்ப்பு: தற்போது, தேசிய The Gross Enrolment Ratio - GER விகிதம் 26 சதவீதம் உள்ளதாகவும், அதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது இலக்காக உள்ளது என்றார். தமிழ்நாடு GER விகிதம் 50 சதவீதத்திற்கும் மேலாக உள்ளதை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்காக உள்ளது என்று கூறியுள்ளார். மெட்ராஸ் ஐஐடியில் மாணவர்கள் அதிகளவில் படிக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வு இல்லாத பி.எஸ். டேட்டா சயின்ஸ் (BS in Data Science), பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை தொடங்கியுள்ளதாக கூறினார். இவ்வாறு தரமான கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று செயல்பட்டு வருவதாக விளக்கினார்.

கிராமப்புற இளைஞர்கள் முன்னேற்றத்தில் பங்கு: மேலும், அனைவருக்கும் ஐஐடிஎம் (IITM) என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருவதோடு, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக 2022-ல் 5 தொடர்பு மையங்களில் இருந்த இருந்து இந்த ஆண்டு 180 ஐஐடி தொடர்பு மையங்கள் உருவாக்கப்படுள்ளன என்றார். தமிழ்நாட்டில் உள்ள 809 மையங்களில் 'கல்வி சக்தி' என்ற பெயரில் எங்கள் தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும், இதன்மூலம் உயர்கல்வியில் ஒட்டுப்மொத்த மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்போது தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.

மாணவர் தற்கொலை விவகாரம்; ஆய்வுக்குழு அறிக்கை வரவில்லை: மெட்ராஸ் ஐஐடியில் இருக்கும் மாணவர்களின் மன அழுத்ததை குறைப்பதற்காக 'நலம்' திட்டம் செயல்படுத்தி வருவதோடு, இதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதனால், மாணவர்கள் தங்களின் மன ஆழுத்தம் குறைந்துள்ளதாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் தற்கொலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் மெட்ராஸ் ஐஐடியில் 15 மையங்களை ஆரம்பித்துள்ளதாகவும், மாணவர்கள் ஐஐடியில் ஒரு பாடப்பிரிவில் படிக்கும்போது வேறு பாடப்பிரிவினையும் தேர்வு செய்து படிக்கலாம் என்று இதில் உள்ள வாய்ப்புகளை விளக்கினார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம்...6 வாரத்தில் நடவடிக்கை - ஐஐடி இயக்குநர்

JEE தேர்வு முடிவுகள் வர உள்ள நிலையில், பெற்றோர்களுக்கு சொல்ல நினைப்பது ரேங்க் என்பது ஒரு எண் தான்; குழந்தைகளை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கம்ப்யூட்டர் துறை தேர்வு செய்கின்றனர் என்றார். இன்னும் சில ஆண்டுகளில் துறைரீதியான பிரிவுகள் இல்லாமல் அனைத்து துறைகளும் இணைந்துதான் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்காக அடுத்த கட்ட நடவடிக்கை என்பது Inter Disciplinary Courses செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க மெட்ராஸ் ஐஐடியில் 2 ஆண்டுகள் படித்தப் பின்னர்தான், முடிவு செய்யும் நிலைக்கு வருவார்கள் என்றார். எனவே தான், பிற துறைகளையும் இணைத்து இந்த Inter Disciplinary Courses தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தான்சானியாவில் மெட்ராஸ் ஐஐடி கிளை: சென்னை ஐஐடியில் ஆரம்பிக்கப்பட்ட பிஎஸ் மெடிக்கல் சயின்ஸ் (BS Medical Science) படிப்பிற்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் தான்சானிய நாட்டில் ஐஐடி சென்னையின் வளாகத்தினை முதல்முறையாக (Inauguration of IIT Madras new campus in Tanzania in East Africa) தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், தான்சானிய நாடும், இந்தியாவும் இணைந்து அதற்கான பணிகளை செய்து வருவதாகவும், இந்த வளாகம், வரும் அக்டோபர் மாதம் செயல்பாட்டிற்கு வர உள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக வெளிநாட்டில் கிளை ஆரம்பிக்கும் மெட்ராஸ் ஐஐடி: மேலும், நாட்டிலேயே முதல்முறையாக மெட்ராஸ் ஐஐடி தான் வேறு ஒரு நாட்டில் புதிய கிளையை தொடங்க உள்ளதாகவும், இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் மாணவர்கள் தொழில் முனைவோராக இருக்க வேண்டும் என்றும் தாங்கள் அதற்கு மாணவர்களுக்கு முழுவதும் துணை நிற்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மாணவர்களை பொறுத்தவரை, தகுதி தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுவதாகவும், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிகளவில் கிராமப்புற மாணவர்கள் இடம் பெறுவார்கள் என்று நம்பிக்கை கூறினார். கிராமப்புற பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளும்போது மெட்ராஸ் ஐஐடியின் பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் படிப்பு குறித்தும் தாம் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: வைரங்கள் குறித்த ஆராய்சி; சென்னை ஐஐடிக்கு ரூ.242 கோடி நிதி

மெட்ராஸ் ஐஐடி சார்பில் எலக்ட்ரானிக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பயிற்சியும், தமிழ்நாட்டில் உள்ள 252 பள்ளிகளில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி அளித்ததோடு, 504 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு பள்ளிக்கும் 10 எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் நாங்கள் கொடுத்துள்ள நிலையில், அவர்கள் 12ஆம் வகுப்பு முடித்ததும் எலக்ட்ரானிக்ஸ் குறித்து தெரிய வேண்டியது முக்கியம் என்றார்.

புதிய கல்விக்கொள்கை உதவும்: புதிய கல்விக்கொள்கையில் சில முக்கிய விஷயங்கள் உள்ளது. Inter Disiplinery Education நிச்சயம் கொண்டு வர உள்ளதாகவும், படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு புதுமையான கண்டுபிடிப்புகளையும் செய்ய புதிய கல்விக்கொள்கை உதவும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் சிறப்பாகத்தான் இருப்பதாக கூறிய அவர், அங்கு படிக்கும் மாணவர்கள் முதுகலைப் படிப்பில் ஐஐடியில் சேர்ந்து படிப்பதாகவும் கூறினார்.

நுழைவுத் தேர்வு எதற்காக?: உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கான இடங்கள் குறைவாக இருக்கும்போது, அதிகளவில் மாணவர்கள் ஒரு பாடப்பிரிவில் சேர்வதற்கு விரும்புவதாகவும், இந்நிலையில் அவர்களை தேர்வு செய்வதற்கு நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது என்றும் நுழைவுத் தேர்வின் அவசியம் குறித்து விளக்கினார். குறிப்பாக, பொதுத்தேர்வில் பலர் ஒரே சதவீதம் பெறும் நிலையில், நுழைவுத் தேர்வு இதற்கு தேவையாக உள்ளதாக அவர் விவரித்தார்.

மேலும் பேசிய அவர், பி.இ., சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் தற்போது பெரும்பாலும் தேர்ந்தெடுப்பதில்லை என்றார். ஆனால், ஒரு நாட்டை கட்டமைக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு படிப்புகளும் மிகவும் முக்கியமானதும் என்றும் எனவே, வருங்காலத்தில் இந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ''பள்ளிப் படிப்பிற்கு பின்னர் உயர்கல்வியை தேர்வு செய்வது எப்படி'' - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி!

குறிப்பாக, மெட்ராஸ் ஐஐடியில் சாதிய பாகுபாடு குறித்த (caste discrimination in IIT Madras) புகார்களை களைவதற்கு, 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய புகார் வந்தால் அப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறிதியளித்தார். விரிவுரையாளர்கள் நியமனத்திலும் கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பின்னர், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் நியமனம் நடைபெறுவதாகவும், இதைத்தொடர்ந்து பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவ உதவி என மெசேஜ்.. சென்னை ஐஐடி மாணவியிடம் 50 ஆயிரம் சுருட்டல்!

Last Updated :Jun 6, 2023, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.