ETV Bharat / state

அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு: விசிகவினர் கைது

author img

By

Published : Dec 7, 2022, 6:54 AM IST

அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீசிய விசிகவினர் கைது செய்யப்பட்டனர்.

அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு
அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு

சென்னை: அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் நேற்று (டிச. 6) அனுசரிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் காவி சட்டை அணிந்தவாறு அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில், ‘காவிய தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகம் இருந்தது.

இதற்கு கடும் கண்டனம் வலுத்த நிலையில், சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு

இதனால் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை அழைத்து செல்ல முயன்றனர். அதனை மீறி விசிக தொண்டர்கள் சிலர், செருப்பு மற்றும் பாட்டிலை அர்ஜூன் சம்பத் மீது எறிந்தனர். ஆனால் போலீசார், அர்ஜூன் சம்பத்தை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 100 பேரை போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்டதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 20 பேர் மீது பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காமல் கூட்டம் கூடுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு குங்குமம் பூசமாட்டேன் - ஹைகோர்டில் கடிதம் தாக்கல் செய்த அர்ஜூன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.