ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 2, 2022, 8:55 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,032 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை 25,866 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 1,302 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 69 லட்சத்து 98 ஆயிரத்து 526 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 லட்சத்து 46 ஆயிரத்து 907 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,734 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 97 ஆயிரத்து 79 என உயர்ந்துள்ளது. சென்னையில் 298 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 127 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 139 நபர்களுக்கும் சேலத்தில் 79 நபர்களுக்கும் ஈரோட்டில் 65 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதையும் படிங்க:கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.