ETV Bharat / state

செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

author img

By

Published : Jan 23, 2022, 8:37 AM IST

செல்ஃபோன் திருடும் சிசிடிவி காட்சி
செல்ஃபோன் திருடும் சிசிடிவி காட்சி

பிரவுசிங் சென்டரில் பணிபுரியும் ஊழியரின் செல்போனை இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு: மதுராந்தகம் தேரடித் தெருவில் பிரவுசிங் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது.

ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு எப்போதும் பணியில் இருப்பர். மேலும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கு வந்து சென்ற வண்ணம் இருப்பர்.

இந்நிலையில் நேற்று (ஜன 22) கடையின் மேசையில் வைக்கப்பட்டிருந்த ஊழியரின் செல்போன் மாயமாகியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.

செல்போன் திருடும் சிசிடிவி காட்சி

அப்போது அடையாளம் தெரியாத இருவர் செல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கான்கிரீட் கலவை இயந்திர லாரி கவிழ்ந்து விபத்து - மூவர் உயிரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.