ETV Bharat / sports

கொரிய ஓபன் 2022; அரையிறுதியின் பி.வி. சிந்து ஏமாற்றம்!

author img

By

Published : Apr 9, 2022, 1:26 PM IST

PV Sindhu
PV Sindhu

தென்கொரியாவில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி போட்டியில் பி.வி. சிந்து ஏமாற்றம் அளித்தார்.

சன்சியோன்: கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2022 தொடர் சன்சியோன் நகரில் உள்ள பல்மா ஸ்டேடியத்தில் (Palma Stadium) நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி. சிந்து, சர்வதேச பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ள கொரிய வீராங்கனையான அன் சே-யோங் ( An Seyoung)-ஐ எதிர்கொண்டார்.

மிகவும் விருவிருப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அன் சே-யோங் ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் முதல் போட்டியில் அன் சே-யோங் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

பின்னர், அடுத்தப் போட்டியை 17-21 என அன் சே-யோங்கிடம் தோற்றார் சிந்து. இந்த நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் 14-21 மற்றும் 17-21 புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார் பி.வி. சிந்து.

இதையும் படிங்க : 'இது இன்னும் முடியவில்லை... பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்': பி.வி. சிந்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.