ETV Bharat / jagte-raho

வெளிநாட்டில் கணவன் சந்தேக மரணம் - ஆய்வு நடத்த மனைவி கோரிக்கை

author img

By

Published : Sep 22, 2019, 12:59 PM IST

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற போது..

ஈரோடு: வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வு நடத்தக் கோரி அவரது மனைவி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஈரோடு முள்ளாம்பரப்பைச் சேர்ந்த செந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கு ரிக் வண்டியில் பணிபுரிய தனியார் நிறுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் முறையாக ஊதியம் வழங்காததால் செந்தில் ஊர் திரும்பப் போவதாகக் கூறி வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி அவர் விபத்தில் உயிரிழந்ததாக ரிக் நிறுவனம் அளித்தது. இதனை ஏற்க மறுத்த குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினர்.

இளம்வயதிலேயே கணவனை இழந்த இவரின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

செந்தில் உடலை மீட்டு உடற்கூறாய்வு நடத்தக் கோரி அவரின் மனைவி தீபா இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். நேற்று உடலை ஒப்படைப்பதாக தூதரகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை செந்தில் உடல் வந்து சேரவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: மகனை மீட்டுத் தரக்கோரி மனு!

இளம்பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக்தந்த முகவர் கொலை

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.21

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு மறு பிரேத பரிசோதனை நடத்த கோரிக்கை!

வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை மீட்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உயிரிழந்தவரின் மனைவி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Body:ஈரோடு முள்ளாம்பரப்பை சேர்ந்த செந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிக் வண்டியில் பணிபுரிய ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கு தனியார் ரிக் நிறுவத்தால் அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் முறையாக ஊதியம் வழங்காததால் செந்தில் ஊர் திரும்ப போவதாக கூறி வந்த நிலையில் கடந்த 7 ம் தேதி செந்தில் மொசாம்பி நாட்டில் உயிரிழந்தார். விபத்தில் அவர் உயிரிழந்ததாக ரிக் நிறுவனம் அளித்த தகவலை ஏற்க மறுத்த குடும்பத்தினர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கூறினர்.

அவரது உடலை மீட்டு மறு பிரேத பரிசோதனை நடத்த கோரி செந்தில் மனைவி தீபா இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். Conclusion:நேற்று உடலை ஒப்படைப்பதாக தூதரகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை செந்தில் உடல் வந்து சேரவில்லை என்றும் தீபா கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.