ETV Bharat / entertainment

ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது - நடிகர் ராதாரவி ஆதங்கம்

author img

By

Published : Jun 29, 2022, 10:34 AM IST

Updated : Jun 29, 2022, 11:33 AM IST

ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது - நடிகர் ராதாரவி ஆதங்கம் ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது.. இனி உச்ச நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தி கேட்க முடியாது - நடிகர் ராதாரவி ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது நடிகர் ராதாரவி
ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது - நடிகர் ராதாரவி ஆதங்கம் ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது.. இனி உச்ச நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தி கேட்க முடியாது - நடிகர் ராதாரவி ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது நடிகர் ராதாரவி

எதிர்காலத்தில் உச்ச நடிகர்களின்‌ சம்பளத்தை ஓடிடி நிர்ணயம் செய்யும் நிலை வரும் என்றும், நடிகர்களால் சம்பளத்தை உயர்த்திக் கேட்க முடியாது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள கனல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன்.28) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ராதாரவி மற்றும் படத்தின் நாயகி காவ்யா பெல்லு, பாடகர் வேல்முருகன், ‍‌‌இசை அமைப்பாளர் தென்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
கனல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

விழாவில் பேசிய ராதாரவி, "ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது. மக்கள் பார்க்காமல் இருப்பதுதான் ஓடிடியா, மக்கள் பார்த்து கைதட்ட வேண்டும். வரும் காலத்தில் ஓடிடி உச்ச நடிகர்களின்‌ சம்பளத்தை நிர்ணயம் செய்யும் நிலை வரும். நடிகர்களால் சம்பளத்தை உயர்த்திக் கேட்க முடியாது.

ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது - நடிகர் ராதாரவி ஆதங்கம்

ஓடிடி நிறுவனங்களுக்குத் தமிழ் சினிமாவின் வரலாறு தெரியாது. எம்கே தியாகராஜ பாகவதர் யார் என்று கேட்கிறார்கள். தமன்னா போன்று இப்படத்தின் கதாநாயகி வெள்ளை வெளேர் என்று இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள்" என்றார்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை காட்சியில் நடிப்பது மிகவும் கஷ்டம் - நடிகர் ராதாரவி

Last Updated :Jun 29, 2022, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.