ETV Bharat / city

பகல்பத்து 4ஆம் நாள்: தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

author img

By

Published : Dec 7, 2021, 11:31 AM IST

Updated : Dec 8, 2021, 10:08 AM IST

வைகுண்ட ஏகாதசி விழா
வைகுண்ட ஏகாதசி விழா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 4ஆம் நாளான இன்று சவுரித் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சிறப்புமிக்க சொர்க்கவாசல் திறப்பு விழா, இந்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

வைகுண்ட ஏகாதசி நாளின் சிறப்பாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பு நாளன்று கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்துடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வந்து அருளும் நம்பெருமாளைத் தரிசிக்கக் கூடும் பக்தர்களே இதற்குச் சாட்சியாகும்.

அதற்கு முன்னதாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் வைரம், வைடூரியம், பவளம் போன்ற பலவிதமான அணிகலன்களால் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

தினந்தோரும் திவ்ய காட்சிகள்

அர்ச்சுன மண்டபத்தில் காட்சியளித்த எம்பெருமாள்
அர்ச்சுன மண்டபத்தில் காட்சியளித்த எம்பெருமாள்

அதன்படி, பகல் பத்து வைபோகத்தின் முதல் நாள் (டிசம்பர் 4), உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்கக் கிளியுடன் ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

பகல் பத்து இரண்டாம் நாள் (டிசம்பர் 5) நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

பகல்பத்து மூன்றாம் நாளான நேற்று (டிசம்பர் 6), நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

பகல்பத்து நான்காம் நாள் (டிசம்பர் 7), நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 4ஆம் நாளான இன்று சவுரித் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி காட்சியளித்தார். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்செய்தனர்.

இதையும் படிங்க: ஆடி பூரம்: அண்ணாமலையார் கோயில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு

Last Updated :Dec 8, 2021, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.