ETV Bharat / city

பகல் பத்து 5ஆம் நாள்: ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

author img

By

Published : Dec 8, 2021, 9:47 AM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 5ஆம் நாளான இன்று ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

திருச்சி: வைகுண்ட ஏகாதசி நாளின் சிறப்பாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பு நாளன்று கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்துடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வந்து அருளும் நம்பெருமாளைத் தரிசிக்கக் கூடும் பக்தர்களே இதற்குச் சாட்சியாகும்.

அதற்கு முன்னதாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான அலங்காரத்துடன் வைரம், வைடூரியம், மௌத்து, பவளம் போன்ற பலவிதமான அணிகலன்களால் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

பகல் பத்து வைபோகக் காட்சி

அதன்படி, பகல் பத்து வைபோகத்தின் முதல் நாள் (டிசம்பர் 4) உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்கக் கிளியுடன் ரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

பகல் பத்து இரண்டாம் நாள் (டிசம்பர் 5) நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்கக் கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்சாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் குட்கா புறப்பட்டார்.

பகல் பத்து மூன்றாம் நாள் (டிசம்பர் 6) நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியாணம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

பகல் பத்து நான்காம் நாள் (டிசம்பர் 7) நம்பெருமாள் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியாணம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி எழுந்தருளினார்.

பகல்பத்து 5ஆம் நாள் - 'ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரம்'

பகல்பத்து ஐந்தாம் நாளான இன்று (டிசம்பர் 8) நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரக் கைகாப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களை அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 5ஆம் நாளான இன்று 'ரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரம்' கொண்டு நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

இதையும் படிங்க: போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.