ETV Bharat / city

தங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் உயிரை மாய்த்துக்கொண்ட வயதான தம்பதி

author img

By

Published : Dec 14, 2019, 3:51 PM IST

An elderly couple commits suicide by falling into canal
An elderly couple commits suicide by falling into canal

திருப்பூர்: தங்களைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் தம்பதியர் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து-காப்பாத்தாள் தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்துவருகின்றனர். உடல்நிலை சரியில்லாத தங்களைக் கவனித்துக் கொள்ள ஆள்கள் இல்லாததால், தம்பதி இருவருமே சோகத்தில் இருந்துவந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் நேற்று மதியம்வரை அவர்கள் வீடு திரும்பவில்லை என அக்கம்பக்கத்தினர் அவர்களது மகள்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அனைவரும் இருவரையும் தேடிவந்த நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் திருப்பூர் மாவட்ட காமநாயக்கன்பாளையம் எல்லைக்குள்பட்ட குள்ளம்பாளையம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கிடந்துள்ளது.

சடலங்களை மீட்டு காவல் துறையினர் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். கவனித்துக்கொள்ள ஆள்கள் இல்லாததால் வயதான தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:திருப்பூர் அருகே வயதான தம்பதியரை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் தம்பதியினர் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன்பாளையம் சேர்ந்தவர்கள் காளிமுத்து , காப்பாத்தாள் தம்பதியினர் இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தங்களை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால் சோகத்தில் இருந்து வந்துள்ளனர்.நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர் ஆனால் நேற்று மதியம் வரை அவர்கள் வீடு திரும்பவில்லை என அக்கம்பக்கத்தினர் அவர்களது மகள்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அனைவரும் இருவரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் திருப்பூர் மாவட்ட காமநாயக்கன்பாளையம் எல்லைக்குட்பட்ட குள்ளம்பாளையம் அருகே பிஏபி வாய்க்காலில் கிடந்துள்ளது. சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால் முதிய தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.