ETV Bharat / city

'என்னம்மா இப்படி பண்றீங்களேமா...' எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்கூடிய அதிமுகவினருக்கு காலாவதியான வாட்டர் பாட்டில் விநியோகம்!

author img

By

Published : Mar 15, 2022, 6:50 PM IST

அமைச்சர் எஸ் பி வேலுமணி
அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு காலாவதியான நீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டின்முன் அதிமுக தொண்டர்களுக்கு காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது.

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த 2016-2022 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58.23 கோடி சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

58 இடங்களில் சோதனை

இதன் மூலம் அவர், 3928 விழுக்காடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும்;இதனால் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்குத் தொடர்பான 58 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில் கோவை மாநகரில் 27 இடங்களிலும், புறநகரில் 14 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.

  1. கோவை சுகுணாபுரத்திலுள்ள எஸ்.பி.வேலுமணி இல்லம்,
  2. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் இல்லம்,
  3. எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் இல்லம்,
  4. கேரளா மாநிலம், அட்டப்பாடி பகுதியில் உள்ள பண்ணை இல்லம்,
  5. கோவை புதூர் ஜெ.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் இல்லம்,
  6. நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரன் இல்லம்,
  7. கேசிபி குழும உரிமையாளர் சந்திரபிரகாஷின் இல்லம்,
  8. கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் மலர்விழி இல்லம்,
  9. கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் மலர்விழியின் அலுவலகம்,
  10. மதுக்கரை வேலுமணியின் உறவினர் சண்முகராஜா இல்லம்,
  11. சிங்காநல்லூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் இல்லம்,
  12. எட்டிமடையில் உள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம் இல்லம்,
  13. குறிச்சி பகுதியில் உள்ள அதிமுக உறுப்பினர் செந்தில் குமார் இல்லம்,
  14. குனியமுத்தூரில் உள்ள அதிமுக பிரமுகர் முந்திரிகோபால் இல்லம்,
  15. குனியமுத்தூரில் உள்ள அதிமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரது இல்லம்,
  16. கோவை புதூரில் உள்ள அதிமுக நிர்வாகி சிவக்குமார் இல்லம்,
  17. முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒன்றியச் செயலாளர் கந்தவேல் இல்லம்,
  18. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகா நாத் சிங் இல்லம்,
  19. பீளமேடு பகுதியில் உள்ள ஏடிஎஸ்பி அனிதா இல்லம்,
  20. பீளமேடு பாரதி நகர் பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர் லோகநாதன் இல்லம்,
  21. அன்னூரில் உள்ள காவல் ஆய்வாளர் சந்திரகாந்தா இல்லம் உட்பட கோவை மாவட்டத்தில் 41 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகின்றது.

காவல் துறையிடம் வாக்குவாதம்

இதனிடையே சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ். பி. வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். திமுக அரசு பொய் வழக்கு போடுவதாகக் கூறி, சிறிது நேரம் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

காலாவதியான தண்ணீர் பாட்டில்கள்

இதனிடையே அவ்வப்போது, அதிமுக தொண்டர்களுக்கு தேநீர், ரோஸ் மில்க், தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதேபோல, முறுக்கு, பிஸ்கட் ஆகியவையும் வழங்கப்பட்டன.

விநியோகம் செய்யப்பட்ட  காலாவதியான வாட்டர் பாட்டில்கள்
விநியோகம் செய்யப்பட்ட காலாவதியான வாட்டர் பாட்டில்கள்

காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி, வடை ஆகியவை வழங்கப்பட்டன. மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் என்று ஆட்டோக்களில் பெட்டி பெட்டியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு விநியோகம் செய்தது, காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் என்று தெரியவந்துள்ளது. விநியோகிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மீது 2021 ஜூலை மாதம் தயார் செய்யப்பட்டதும், 6 மாதங்களுக்குள் குடிக்க உகந்தது என்பதும் அச்சிடப்பட்டுள்ளது.

தண்ணீர் பாட்டில்கள் காலாவதியானது தெரியாமல் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.