ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 6983 பேருக்கு கரோனா தொற்று

author img

By

Published : Jan 6, 2022, 10:53 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 6,983 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

கரோனா தொற்று உறுதி
கரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 6) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 496 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6983 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று

தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 71 லட்சத்து 62 ஆயிரத்து 420 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டிலிருந்த 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 22 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 721 நபர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து ஏழாயிரத்து 779 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஏழு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஒன்பது நோயாளிகளும் என 16 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 825ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 3,759 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,691 நபர்களுக்கும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று

ஒமைக்ரான் தொற்றைப் பொறுத்தவரையில் 121 நபர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு கல்லூரிகள் - 'கரோனா சிகிச்சை மையம்'

மேலும், கரோனா கேர் சென்டரை அதிகரிக்க சுகாதாரத் துறை, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதில், முக்கியமாக அரசுக் கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை விடுமுறைக்கு அனுப்பிவிட்டு, அங்கு கரோனா சென்டர் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

பல்வேறு கல்லூரிகளிலிருந்து இன்று மாணவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். குறிப்பாக, விக்டோரியா கல்லூரியில் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தொடங்கியது இரவு நேர ஊரடங்கு: காவல் துறை பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.