ETV Bharat / city

தொடங்கியது இரவு நேர ஊரடங்கு: காவல் துறை பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

author img

By

Published : Jan 6, 2022, 10:13 PM IST

தமிழ்நாட்டில் இன்று இரவு நேர ஊரடங்கு தொடங்கிய நிலையில் சென்னையில் பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்..

சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

சென்னை: கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்றுமுதல் (ஜனவரி 6) இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், இன்று இரவுமுதல் ஊரடங்கானது நடைமுறைக்கு வந்த நிலையில் சென்னை மாநகரில் பத்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

காவல் ஆணையர் எச்சரிக்கை

மேலும், சென்னையில் தேவையின்றி வெளியில் வருபவர்களைக் கண்காணிக்க 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அத்தியாவசிய பணிகள், மருத்துவத் தேவைகளுக்காகச் செல்வோர் அதற்கான ஆவணங்களைக் காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் பணிகள் - காவல் துறை தீவிரம்

அதேபோல தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்குள்பட்ட இடங்களில் ஆயிரத்து 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 36 இடங்களில் வாகன சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் பள்ளி, கல்லூரி விடுமுறை: பெருங்களத்தூரில் குவிந்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.