ETV Bharat / city

அரசுத்துறையில் புதிய பணியிடங்களுக்குத் தடை!

author img

By

Published : May 21, 2020, 11:22 PM IST

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

சென்னை : அரசுத்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அரசாணையில், கரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக அரசுத்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகுதியாக அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும்; அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.