ETV Bharat / city

வீடியோ: மதுபோதையில் அட்டகாசம் செய்யும் இளம்பெண்கள்

author img

By

Published : Jul 30, 2022, 8:59 PM IST

குடிபோதையில்  அட்டகாசம் செய்யும் இளம்பெண்கள்
குடிபோதையில் அட்டகாசம் செய்யும் இளம்பெண்கள்

சென்னை அண்ணா நகரில் மதுபோதையில் துப்புரவு பணியாளரிடம் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை: அண்ணா நகர் ரவுண்டானா அருகே நேற்று (ஜூலை.30) நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு இளம்பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் வந்தனர். அப்போது திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டிலேயே சண்டையிட்டு கொண்டனர். அப்போது அங்கு துப்புரவு பணி செய்து வந்த பணிப்பெண் ஒருவர் சண்டையிட்டு வந்தவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள், துப்புரவுப்பணி பெண்ணை தாக்கி அவரது செல்போனை பறித்து தூக்கி எரிந்ததாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த மற்றொரு துப்புரவு பணியாளரின் சட்டையையும் கிழித்து தாக்க முயன்றாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அண்ணா நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த இளம்பெண்கள் தங்களது செயினை துப்புரவு பணியாளர்கள் பறித்தாக குற்றம் சாட்டினர். இதையடுத்து காவலர்கள் இளம்பெண்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே தன்னை தாக்கி செல்போன் பறித்து சென்றதாக துப்புரவு பணியாளர் ரங்கீலம்மாள் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் இரண்டு இளம்பெண்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி: பட்டப்பகலில் விடுதி உரிமையாளர் வெட்டி படுகொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.