ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 11, 2021, 11:50 AM IST

கரோனா
கரோனா

நாட்டில் நேற்று (ஆக.10) மட்டும் 40 ஆயிரத்து 13 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 38 ஆயிரத்து 353 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 511ஆக அதிகரித்துள்ளது. நேற்று (ஆக.10) மட்டும் 497 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 29 ஆயிரத்து 179ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து 40 ஆயிரத்து 13 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக இதுவரை மூன்று கோடியே 12 லட்சத்து 20 ஆயிரத்து 981 பேர் மீண்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 53 கோடியே 24 லட்சத்து 44 ஆயிரத்து 960க்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாளை விண்ணில் பாய்கிறது EOS-03 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.