ETV Bharat / bharat

மூவர்ணக் கொடியை பற்றி தெரிந்து கொள்வோம்

author img

By

Published : Jul 22, 2020, 5:46 PM IST

கொடி
கொடி

உலகில் உள்ள ஒவ்வொரு சுதந்திர தேசமும் அதற்கான தேசிய கொடியைக் கொண்டுள்ளது. அது ஒரு சுதந்திர நாட்டின் சின்னம். இந்தியாவின் தேசியக் கொடி என்பது நீள்வடிவில் மூன்று வண்ணங்களால் ஆனது, மேலே காவி நிறம், நடுவில் வெள்ளை மற்றும் கீழே அடர் பச்சை என சம விகிதத்தில் உள்ளது. வெள்ளைப் பகுதியின் மத்தியில் சாரநாத்தில் உள்ள அசோகரின் சிங்க ஸ்தூபியின் உச்சியில் தோன்றும் சக்கரத்தின் வடிவமைப்பை கொண்ட, 24 ஆரங்கள் உள்ள நீலநிற சக்கரம் உள்ளது.

1947 ஜூலை 22ஆம் தேதி மூவர்ண இந்திய தேசிய கொடியை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ஆம் தேதி தேசிய கொடி ஏற்பு தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய கொடி ஏற்பு தினத்தை கொண்டாடுவதன் மூலம், நமது தேசியக் கொடியை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாது நமது கொடியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவும், நமது தேசியக் கொடிக்கு மனமார்ந்த வணக்கம், கவுரவம் மற்றும் மரியாதை செலுத்துவதோடு, இந்திய கலாசாரங்களையும் மரபுகளையும் நமது புதிய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தேசபக்தியின் உண்மையான அர்த்தத்தை எடுத்துக் காட்டுவதற்கும், இந்திய மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரிடையே அதன் உண்மையான சாரத்தையும் ஆற்றலையும் பரப்புவதற்காகவும் மூவர்ண இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய கொடி ஏற்பு தினத்தை கொண்டாடுவது என்பது இந்திய தேசியக் கொடியின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்கும், இந்தியக் கொடியின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குமான மற்றொரு முக்கியத்துவமும் உள்ளது.

இந்திய தேசிய கொடி ஏற்பு தினத்தின் வரலாறு

பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த இந்திய தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதனால்தான் இந்த நாள், 1947 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் "இந்திய தேசியக் கொடி ஏற்பு தினம்" என்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட கூட்டத்தில் "இந்திய டொமினியனின் அதிகாரபூர்வ கொடி" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது தேசியக் கொடியின் தற்போதைய வடிவம் நடைமுறைக்கு வந்தது.

நமது தேசியக் கொடியின் பரிணாம வளர்ச்சி

முதல் கொடி: இந்தியாவில் முதல் தேசியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவின் கல்கத்தாவில் உள்ள பார்சி பகன் சதுக்கத்தில் (கிரீன் பார்க்) ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கொடி நீள்வடிவில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று பாகங்களால்ஆனது.

கொடி
கொடி

இரண்டாவது கொடி: எழு நட்சத்திரங்கள் உள்ள 'சப்தரிஷி கொடி' என்று அழைக்கப்படும் இது 1907 ஆகஸ்ட் 22 அன்று ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற சர்வதேச சோசலிச காங்கிரஸில் ஏற்றப்பட்டது.

கொடி
கொடி

மூன்றாவது கொடி: 1917-ல் நமது அரசியல் போராட்டம் ஒரு திட்டவட்டமான நிலையில் இருந்தபோது மூன்றாவது கொடி உருவானது. டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோக்மண்ய திலக் ஆகியோர் சுயராஜ்ய இயக்கத்தின் போது அதை ஏற்றினர். இந்த கொடியில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நேர்கோல் நீள்வடிவம் ஆகியவற்றில் மேல் சப்தரிஷி கொடியில் உள்ள ஏழு நட்சத்திரங்கள் என மாறி மாறி அமைக்கப்பட்டன,. இடது புற மேல் மூலையில் (கொடிக்கம்ப முனை) யூனியன் ஜாக் வடிவம் இருந்தது. மற்றொரு மூலையில் ஒரு வெள்ளை பிறைநிலா மற்றும் நட்சத்திரமும் இருந்தது.

கொடி
கொடி

நான்காவது கொடி: 1921-ல் பெஸ்வாடாவில் (தற்போதைய விஜயவாடா) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தின் போது ஒரு ஆந்திர இளைஞர் ஒரு கொடியைத் தயாரித்து காந்திஜிக்கு எடுத்துச் சென்றார். இது இரண்டு முக்கிய சமூகங்களை, அதாவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை குறிக்கும் சிவப்பு மற்றும் பச்சை என்று இரண்டு வண்ணங்களால் ஆனது. இந்தியாவின் மீதமுள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெள்ளை நிற’ பகுதியையும், தேசத்தின் முன்னேற்றத்தை குறிக்கும் ராட்டை ஆகியவற்றை சேர்க்க காந்தி பரிந்துரைத்தார்.

கொடி
கொடி

ஐந்தாவது கொடி: 1931-ம் ஆண்டு கொடியின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாக இருந்தது. மூவர்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கொடி, தற்போதுள்ள காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்துடன், மத்தியில் மகாத்மா காந்தியின் ராட்டையும் இடம்பெற்றிருந்தது. இது எந்தவொரு இனவாத முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டது.

கொடி
கொடி

தற்போதைய கொடி: ஜூலை 22, 1947 அன்று, அரசியலமைப்பு சபை அதை சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது. சுதந்திரம் கிடைத்த பிறகு, வண்ணங்களும் அவற்றின் முக்கியத்துவமும் அப்படியே இருந்தன. ராட்டைக்கு பதிலாக அசோகா சக்கரவர்த்தியின் தர்ம சக்கரம் கொடியின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக் கொடி இறுதியில் சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடியாக மாறியது.

தேசியக் கொடி அமைப்பின் கூறுகள்

முதல் பகுதி (காவி): நாட்டின் வலிமையையும் தைரியத்தையும் குறிக்கிறது.

இரண்டாவது பகுதி (வெள்ளை): 24 ஆரங்களை கொண்ட தர்ம சக்கரம், அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது.

சக்கரம் (சக்ரா): கிமு 3-ம் நூற்றாண்டு மவு ரிய சக்கரவர்த்தி அசோகர் உருவாக்கிய சாரநாத்தில் உள்ள 'சட்டத்தின் சக்கரம்' என்பது 'தர்ம சக்கரம்' என சித்தரிக்கப்பட்டது. இயக்கத்தில் உயிர் இருப்பதையும், இயங்காமையில் மரணம் இருப்பதையும் சக்கரம் சுட்டி காட்டுகிறது.

24 ஆரங்களின் பொருள் - அன்பு, பொறுமை, பெருந்தன்மை, விசுவாசம், தன்னலமின்மை, சுய தியாகம், நேர்மை, கருணை, பணிவு, அனுதாபம், தார்மீக மதிப்புகள், கடவுளிடம் பயம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆன்மீகம், பச்சாத்தாபம், கருணை, நீதி, உண்மை, சுய கட்டுப்பாடு, மென்மை, அமைதி, நன்மை, தைரியம்.

மூன்றாம் பகுதி (பச்சை): இது நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் புனிதத்தன்மையைக் காட்டுகிறது.

இந்தியக் கொடி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

  • இந்திய தேசிய கொடி உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் 29 மே 1953 அன்று ஏற்றப்பட்டது.
  • 1907 ஆகஸ்ட் 22-ம் தேதி ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் வெளிநாட்டு மண்ணில் கொடியை ஏற்றிய முதல் நபர் சீமாட்டி பைக்கஜி ருஸ்டோம் காமா ஆவார்.

1984-ம் ஆண்டில் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றபோது இந்திய தேசியக் கொடி விண்வெளிக்கு பறந்தது. ராகேஷ் ஷர்மாவின் விண்வெளி உடையில் ஒரு பதக்கமாக கொடி இணைக்கப்பட்டது. (முதல் இந்திய விண்வெளி வீரராக ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார்)

இதையும் படிங்க: குழாய் மூலம் குடிநீர்: மெகா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.