ETV Bharat / bharat

குழாய் மூலம் குடிநீர்: மெகா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

author img

By

Published : Jul 22, 2020, 4:53 PM IST

இம்பால்: மணிப்பூரில் இரண்டு லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் விநியோகம் செய்ய மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. அந்த வகையில், மணிப்பூரில் 16 மாவட்டங்களில் உள்ள 2,80,756 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கவுள்ள இந்நிகழ்ச்சியில், மாநில ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவில் 19 கோடி வீடுகள் உள்ளன. இதில், 24 விழுக்காடு வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 14,33,21,049 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரின் கூட்டணியில் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மணிப்பூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. வடகிழக்கு பிராந்தி வளர்ச்சி துறை அளிக்கும் நிதியிலிருந்து மற்ற வீடுகளுக்கு குடிநீர் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி: பத்திரிகையாளர் கொலையை கண்டித்த ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.