ETV Bharat / bharat

ரூ.55 ஆயிரத்திற்காக பேத்தியை விற்ற பாட்டி.! - பாலியல் வன்கொடுமை பரிதாபம்!

author img

By

Published : Feb 7, 2023, 12:27 PM IST

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

55 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக 13 வயது பேத்தியை பாட்டி விற்பனை செய்த கொடூரம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பணம் கொடுத்து மைனர் பெண்ணை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் 13 வயது சிறுமி மனக் சவுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் உள்ளிட்டோருடன் வசித்து வந்துள்ளார்.

சிறுமியின் மூத்த சகோதரிக்கு, கடந்த 4 - 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இளைய சகோதரி மாற்றுத் திறனாளி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் பாட்டிக்கும், அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் காய்கறி விற்கும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், திருமணச் செலவுகள் இல்லாமல், பணம் பெற்றுத் தருவதாகவும் சிறுமியின் பாட்டியிடம் காய்கறி விற்கும் பெண் ஆசை வார்த்தை கூறியதாக சொல்லப்படுகிறது. பணம் கிடைக்கும் ஆசையில் சிறுமியுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு பாட்டி சென்றுள்ளார்.

அங்கு ஒரு பெண்ணை அறிமுகப்படுத்திய காய்கறி விற்கும் பெண், அவர்களது பொறுப்பில் சிறுமியை விட்டுவிட்டு 55ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுத் தந்ததாக கூறப்படுகிறது. தன் மகனுக்கு சிறுமியை திருமணம் செய்து வைப்பதாக அறிமுகமான பெண், சிறுமியின் பாட்டியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

வாங்கிய பணத்தில் 40 ஆயிரம் ரூபாயை சிறுமியின் பாட்டியும், மீதமுள்ள தொகையை காய்கறி விற்கும் பெண்ணும் பங்கு போட்டுக் கொண்டு சொந்த ஊர் சென்றதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் முன்பின் அறிமுகமில்லாத இடத்தில் கைவிடப்பட்ட சிறுமியிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அந்த வீட்டு இளைஞர், தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி சிறைவைக்கப்பட்ட சிறுமி தொடர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேறொரு ஊரைச் சேர்ந்த பெண்ணும் விலைக்கு வாங்கப்பட்டு சிறுமி போல் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சமயம் பார்த்து வீட்டை விட்டு தப்பிய சிறுமி தனக்கு நடந்த அக்கிரமங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகராக அளித்துள்ளார். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விகாஸ் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சிறுமியின் பாட்டி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.