ETV Bharat / bharat

காவலரின் குடும்பத்தை கொலை செய்த மூன்று பேர் கைது

author img

By

Published : Nov 22, 2020, 11:51 AM IST

3 cousins held for triple murder in UP
3 cousins held for triple murder in UP

உத்தரப் பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக காவலரின் குடும்பத்தை அடித்தே கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டம். சாம்ரௌடி பகுதியைச் சேரந்த காவலர் ஒருவர் குடும்பத்தினர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இது தொடர்பாக காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோடாரி, கம்பு, தடி போன்ற ஆயுதங்களைக் கொண்டு காவலர் ஒருவரின் குடும்பத்தினர் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் காவலரின் குடும்பத்திற்கும், அருகில் வசிப்பவரின் குடும்பத்திற்கும் உணவுக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்பாக விரோதம் இருந்து வந்துள்ளதும், அவை தொடர்ந்து அதிகரித்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விரோதம் தீவிரமடைந்ததையடுத்து, காவலரின் தாய் மற்றும் சகோதரியை அண்டை வீட்டில் வசிப்பவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து, தகவலின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருவது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: உ.பி., பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.