ETV Bharat / state

திருச்சியில் மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை! - students new record in silambam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 6:23 PM IST

Updated : May 1, 2024, 7:43 PM IST

Silambam
Silambam

Silambam: திருச்சி மாவட்டம், கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் பல்வேறு சிலம்பக் கூடத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் 620 சிலம்ப மாணவர்கள் ஒன்றிணைந்து மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

திருச்சியில் மூன்றரை மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

திருச்சி: மே தினமான இன்று (மே.1) உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில், திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், பல்வேறு சிலம்பக் கூடத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் 620 சிலம்ப மாணவர்கள் ஒன்றிணைந்து, காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

இந்தச் சாதனை புத்தகப் பார்வையாளர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிட்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. இதுகுறித்து மாணவி சுகித்தா கூறுகையில், "உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இங்கு 600க்கும் மேற்பட்டோர் காலை 6 மணியிலிருந்து 9.30 மணி வரை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளோம்" என்றார்.

மேலும், இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள சதீஷ்குமார் கூறுகையில், “அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். இந்த மைதானத்தில் கிட்ஸ் உலக சாதனை என்ற பெயரில், குழந்தைகளைப் பாதுகாப்போம், பெற்றோர்களைப் போற்றுவோம் என்ற தலைப்பில், குறிப்பாக பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் 3 மணி நேரம் 30 நிமிடத்தில் சிலம்பம் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். இதை, தமிழ்நாடு உலக இளைஞர் சிலம்பம் கூட்டமைப்பு சிறப்பாக நடத்தினர்.

இதன் அடிப்படை நோக்கமே குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் போற்றுவோம், பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்போம். குறிப்பாக, பெற்றோர்களைப் பாதுகாப்போம். பெற்றோர்களுடைய தியாகத்தைப் போற்றுவோம் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பெற்றோர் இந்த நிகழ்ச்சியைக் காண வந்தனர். திருச்சி திருப்பம் தரக்கூடிய மண்.

அதேபோல், குழந்தைகளின் உடலையும், வாழ்க்கையும் மேம்படுத்துவதற்கு சிலம்பக் கலை தான் தமிழர்களுடைய பாரம்பரியக் கலை, மரபுக் கலை, போற்றக்கூடிய கலை. இதை விளையாட்டுத் துறையிலும் சேர்த்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளித்துள்ளனர்.

இதையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கோடை காலத்தை மாணவர்கள், பெற்றோர் பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், நீரைச் சேமிக்க வேண்டும், நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிலம்பாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க: மாற்றம் அறக்கட்டளை தொடங்க காரணம் என்ன? - ரகசியம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்! - MAATRAM STARTED By RAGHAVA LAWRENCE

Last Updated :May 1, 2024, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.