ETV Bharat / state

மதவாத சக்திகளுக்கு எதிராக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பா.ரஞ்சித் வேண்டுகோள்.! - Tamil Nadu Lok Sabha Election

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 6:13 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் தனது வாக்கினை செலுத்தியதாக இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட கர்லப்பாக்கம் வாக்குச்சாவடியில் பா. ரஞ்சித் வாக்களித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும், அதற்காக தனது வாக்கினை செலுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இது மிக முக்கியமான தேர்தல் என தெரிவித்த அவர், இந்திய இறையாண்மைக்கு சவால் விட கூடிய தேர்தலாக இந்த தேர்தலை பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும், மதவாத சக்திகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பக்கூடிய ஒவ்வொருவருக்கும் இது அவசியமான தேர்தல் எனக்கூறிய பா. ரஞ்சித், இதனால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுகொண்டார். தொடர்ந்து பேசிய அவர், மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் ஒரு தேர்தல் இது எனவும் கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தோட்டாவை விட மிக வலிமையானது வாக்கு" சிவகார்த்திகேயன்.! - Tamil Nadu Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.