ETV Bharat / state

"தோட்டாவை விட மிக வலிமையானது வாக்கு" சிவகார்த்திகேயன்.! - Tamil Nadu Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 5:23 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன் "வாக்கு நம் உரிமை வாக்குப் பதிவு கடமை" என தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், முதல் முறையாக வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "வாக்காளர்கள் அனைவரும் உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் தோட்டாவை விட மிக வலிமையானது வாக்கு. அதை நாம் பயன்படுத்த வேண்டும்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நம் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு நாம் வாக்களித்திருக்க வேண்டும் . என் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் சொல்ல விரும்புவது அதுதான். யாரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.... உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்". என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜனநாயகக்கடமையை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.! - Tamil Nadu Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.